Breaking News

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு:

 


தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவர் என்றும் தெரிவித்துள்ளார்.


 

No comments