Breaking News

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் காப்பீடு. வெளியான சூப்பர் குட் நியூஸ்.!!!

 


2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த பட்ஜெட்டின் மீது சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் 2024இல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தற்போது 5 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் கவரேஜ் மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை பெற சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments