Breaking News

வகுப்பறையில் தாலி கட்டிக்கொண்ட மாணவி... போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவன்... சீரழியும் இளைய தலைமுறை!

 


12ம் வகுப்பில் படித்து வரும் மாணவியும், சக மாணவரும் காதலித்து வந்த நிலையில், பள்ளி வகுப்பறையில் மாணவி தாலி கட்டிக் கொள்ளும் புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூரில் வசித்து வருபவர் 16 வயது மாணவி. இவர் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் மனச்சனம்பட்டியில் வசித்து வரும் 16 வயது மாணவனும் படித்து வருகிறார். மாணவனும் மாணவியும் காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 27ம் தேதி காலை மாணவன் பள்ளி வளாகத்திலேயே வகுப்பறையில் வைத்து மாணவிக்கு தாலிகட்டி விட்டார். தாலி கட்டியதை வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

இருவரும் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெண்ணின் பெற்றோர் மாணவனிடம் விசாரித்தனர். இதனால் இருதரப்பினரிடைய மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவே சிறுமி, சிறுவனுடன் மாயமாகி விட்டார். இது குறித்து சிறுமியின் தந்தை தலைமையாசிரியரிடம் கேட்ட போது, அவர் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் மாயமாகிய சிறுவன், சிறுமியர் இருவரையும் கண்டுபிடித்த போலீசார், மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த அனைத்து மகளிர் போலீசார், மாணவியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை சரியான முறையில் வழி நடத்தாமல் என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாற்று சான்றிதழ் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து மாணவியின் தந்தை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு வழங்க வேண்டும். ஆண் பெண் இருபாலருக்கும் ஒரே பள்ளி அமைந்துள்ளதால் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது போன்ற சம்பவங்கள் பள்ளியில் நடைபெறாமல் இருப்பதற்கு ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments