தீபாவளிக்கு மறுநாள் ( 21.10.2025 ) பொது விடுமுறை அறிவிப்பு.
தீபாவளிக்கு மறுநாள் ( 21.10.2025 ) பொது விடுமுறை அறிவிப்பு.
இந்த
ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த
ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் , அவர்தம் பெற்றோர்கள் ,
ஆசிரியர்கள் , அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில்
பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21.10.2025 அன்று
ஒரு நாள் மட்டும் , தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் ,
பொதுத்துறை நிறுவனங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் கல்வி
நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும் , அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும்
வகையில் 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு
உத்தரவிட்டுள்ளது .
No comments