Breaking News

போஸ்ட் ஆபிசில் வேலை... மாதம் ரூ.30,000 சம்பளம்.. விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் !

 

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (IPPB) காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வழியாகியுள்ளது. இதில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இந்தியா முழுவதும் மொத்தம் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

எக்சிகியூடிவ் பணியிடத்திற்கான 348 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கல்வித் தகுதி இதற்கான கல்வி தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

1.08.2025 அன்று 20 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்:இதற்கு சம்பளமாக மாதம் ரூ. 30,000 வழங்கப்படு இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு தற்போது தபால் அலுவலகத்தில் ஜி.டி.எஸ் எனப்படும் கிராம அஞ்சல் ஊழியர்களாக பணியாற்றி வருபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 

இதற்கு விண்ணப்பிப்பதற்கு 29.10.2025 கடைசி தேதி ஆகும்.விண்ணப்பக் கட்டணம்: இதற்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்ப கட்டணமாக அனைத்து பிரிவினருக்கும் ரூ.750 செலுத்த வேண்டும். 

No comments